Sunday, June 24, 2012

பித்தனின் பிதற்றல்கள்


பித்தனின் பிதற்றல்கள்
நீ என்னை தாண்டி போகையிலே
   நான் விண்ணை தாண்டி குதிகின்றேன்,
உன் இனிய குரலை கேட்டபின்
   இனி எவ்  இசையும் வெறும் ஓசைதான்,
உன் முத்து பற்கள் சிரிக்கையிலே
   மனம் பித்து பிடிக்குது உண்மையிலே,
உன் கருவண்டு கண்களின் காட்சிதனில்
   இடறி விழுகுது இதய துடிப்பு,
உன் குட்டை சடை ஆடுகையில்
   சுளுக்கு விழுது மனசுக்குள்ளே,
உன் துப்பட்டாவின் வாசனைக்கு
   என் கைகுட்டையும் ஏங்குதடி,
நீ கண்டும் காணாமல் போகையிலே
   மனம் வெந்தும் வேகாமல் சாகுதடி,
இம்மையில் நீ என்ன கருதலின்னா
   என் மெய்யும் நெருப்பினில் கருகாதே!
--------கதிர்